தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்மந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.