நாங்குநேரி: சிங்கிகுளத்தில் செயலிழந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றவேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். நாங்குநேரி அருகேயுள்ள சிங்கிகுளம் கைலாசபதி இந்து நடுநிலைப்பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது வலுவிழந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பாடில்லாத இந்த தொட்டி தற்போது சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காங்கிரீட் கம்பிகளுடன் கூடிய நான்கு தூண்களும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள பள்ளியின் மாணவர்கள் அங்கு ஓடி விளையாடிவது வழக்கம்.