போலி நீதிபதி வீட்டில் போலீசார் சோதனை

மேட்டுப்பாளையம் : சேலம் செவ்வாய்பேட்டையில் போலி ஆவணம் மூலம் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த போலி நீதிபதி சந்திரனை கடந்த மாதம் 29ம் தேதி போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.  இதில் போலியான சமரச தீர்ப்பாயத்தை ஏற்படுத்தி போலி நீதிபதியாக செயல்பட்டு அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் நேற்று மேட்டுப்பாளையம் மணி நகரில் சந்திரனுக்கு சொந்தமான வீட்டில் சோதனையிட்டனர்.இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலி சீல்களையும், போலியான ஆவணங்களையும் ேபாலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து அவரது உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: