புதுடெல்லி: அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது. உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசின் நிதியுதவி பெரும் கல்லூரிகள் மட்டுமே தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார குழுமத்தின் அனுமதி பெறுவது தற்போது வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகள் நாக் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இதனை மாற்றுவதற்காக அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் புதிய திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.