டெஸ்ட் போட்டிகளில் டிராவுக்காக ஆட மாட்டோம். நம்பர் ஒன் இடத்தை சிறப்பாக ஆடி தக்க வைப்போம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று துவங்கியது. இது இந்திய அணி கேப்டனாக விராட் கோஹ்லி பங்கேற்கும் 50வது டெஸ்ட் போட்டி. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடும். மேலும், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 11வது வெற்றி என்ற சாதனையும் இந்திய அணியின் வசமாகும்.