பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வடகரை ஊராட்சியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து தெருக்களிலும் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள வடகரை ஊராட்சியில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நின்று சாலை முழுக்க தண்ணீர் சூழ்ந்து மழை நீர் உள்ளதால் கொசுக்கள் பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.