மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட பின்னர், மும்பை புறநகர் மாவட்டத்தில் இதுவரை, ₹9.54 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பறக்கும் படைகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் படைகளை அமைத்தது. இந்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.