திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதிகளில் கம்பு உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயத்தில் பெருத்த நஷ்டமடைந்தனர். இதன் விளைவாக வழக்கமாக பயிரிடப்படும் நெல், கரும்பு உள்ளிட்டவைகளை தவிர்த்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை இந்த வருடம் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.