உசிலம்பட்டி: மழை பெய்ய வேண்டி மலை உச்சியில் உணவை கொட்டி 3 கிராம மக்கள் சாப்பிட்டு ேநற்று வினோத வழிபாடு நடத்தினர். மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகே மலை உச்சியில் ஓணாகரடு நீலமேக பெருமாள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி 3வது சனிக்கிழமை இப்பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டுமென மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று எம்.கல்லுப்பட்டி, சூலப்புரம், மள்ளப்புரம், ஆகிய கிராம மக்கள் அரிசி, பருப்பு, காய்கறி, காணிக்கை பணம் ஆகியவற்றை வசூல் செய்து மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.