மதுரை: மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விக்னேஷின் மரணம் குறித்த விசாரணையை காவல்துறையின் வேறு பிரிவிற்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணரை சேர்ந்த அலோசியஸ் பிரான்சிஸ்கொ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானியான தமது கணவர் தினேஷ், உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் முக்கடல் அருகே கால்வாயில் கடந்த ஜூலை மாதம் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் அலோசியஸ் பிரான்சிஸ்கொ குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மரணம் குறித்த வழக்கு: குமரி எஸ்.பி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
- மரணம்
- விஞ்ஞானி
- மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மையம்
- குமாரி எஸ்.பி.
- ஐ.சி.டி கிளை
- மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி