ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் எனும் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி நாளை திருப்பதியில் ஒருநாள் தரிசனம் மற்றும் மூலவருக்கு நவரத்தின அங்கி சேவை நடக்கிறது. பிரதூர்த்தபட்டான இத்தலம் பிரதூர்த்தன் என்ற அரக்கன், ரோமரிஷி மற்றும் இந்திரன் உதவியால் திருமால் தரிசனம் பெற்ற தலமாகும். பராசர முனிவர் மைத்ரேய மகரிஷிக்கு விஷ்ணுபுராணம் எடுத்துரைத்ததும் இத்தலத்தில்தான். ஏகஜெயதேவராயர், விஜய நரசிம்மராயர் உள்பட பல்வேறு அரசர்கள் இந்த கோயிலில் திருப்பணி செய்துள்ளதாக கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இத்தலத்தில் வைகாசி விசாக கருட சேவை, கஜேந்திர மோட்சம் என பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது.
ஆம்பூர் துத்திபட்டில் புரட்டாசி பெருவிழா : பிந்து மாதவபெருமாள் கோயிலில் நாளை திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்
- பட்டாசி விழா
- தரிசனம்
- அம்புர் துட்டிப்பா
- பிந்து மாதவ பெருமாள்
- கோவில்
- பெருமாள் கோயில்
- திருப்பதி கோவில்