சாயல்குடி : தசரா திருவிழா வருவதையொ ட்டி கடலாடியில் வேடமணிந்த பக்தர்கள் வீடு, வீடாக சென்று முத்தெடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரி விஷேச காலத்தில் திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கடலாடி பத்திரகாளியம்மன் தசார குழுவினர் கடந்த செவ்வாய் கிழமை காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இதில் பலவகை காளி, மாடன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சியம்மன், நாகதேவதை, முனிவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேஷமிட்டு முத்து எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.