புதுடெல்லி: மொரீஷியஸ் நாட்டின் மெட்ரோ ரயில் சேவை, சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படும் மத்திய அரசு, அண்டை நாடுகளான இலங்கை, மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் ஆகியவற்றுடனான உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் மெட்ரோ ரயில் சேவை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உடன் இணைந்து காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.