ஹூஸ்டன்: அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய போலீஸ் அதிகாரியின் உடல் தகனம் நடைபெற்றது. அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் சந்திப் சிங் தலிவால்(42). இவர் ஹூஸ்டன் பகுதியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 30ம் தேதி அவர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற காரில் இருந்த ராபர்ட் ேசாலிஸ் என்பவர் திடீரென சரமாரியாக தலிவாலை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமெரிக்க காவல்துறையில் தாடி வளர்க்கவும், டர்பன் கட்டவும் அனுமதி பெற்றிருந்த முதல் போலீஸ்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் தலிவால். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பெர்ரி மையத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.