தண்டையார்பேட்டை, அக். 3: சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், பூக்கடை, யானைக்கவுனி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்போன் திருட்டு சம்பந்தமாக 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்போன் திருடும் கும்பல் தலைவர் விஜயவாடாவை சேர்ந்த ரவி (29) என்பவர் தங்களை சென்னைக்கு அனுப்பியதாக கூறினர். இதையடுத்து ரவியை போலீசார் ேதடிவந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரிமுனைக்கு வந்த ரவியை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “விஜயவாடாவை சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கூட்டநெரிசல், திருவிழா, பேருந்து, ரயில்நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்போன், மணிபர்ஸ் திருடும்படி கூறுவேன்.