பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கடந்த 24ம் தேதி தொடங்கியது. 37 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டிகளில் கேரளாவை ஜார்க்கண்டும், ஆந்திராவை சவுராஷ்டிராவும், நாகலாந்தை அசாம் அணியும் வீழ்த்தின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு போட்டியில் சட்டீஸ்கர் அணியும், கர்நாடகா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், தேவ்தத்தும் களமிறங்கினர். 8 ரன்கள் எடுத்திருந்தபோது தேவ்தத் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.