மும்பை: ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் அனில் அம்பானி, நிறுவன ஆண்டு கூட்டத்தில் பங்குதாரர்களிடையே நேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது: ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், கடன் வழங்கும் பணிகளில் இனி ஈடுபடாது. ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் சிறு தொழில் கடன்களையும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வீட்டு கடன்களையும் வழங்கி வந்தது. இந்த இரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு 25,000 கோடி. இனி ரிலையன்ஸ் கேபிடல் மேற்கண்ட இரு நிறுவனங்களிலும் பங்குகளை மட்டுமே வைத்திருக்கும். இந்த நிறுவனத்தில் சுமார் 10 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர்.