23ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,700க்கும், சவரனுக்கு ரூ.1160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதே நேரத்தில் மறுநாள் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,730க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,755க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று கவலையடைய செய்துள்ளது.
The post சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது தங்கம் விலை மீண்டும் ஏற்றம் appeared first on Dinakaran.