தண்டையார்பேட்டை: காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (26), மீனவர். மது பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, ரகளையில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் குடித்து விட்டு வந்து, தாய் புஷ்பத்தை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புஷ்பம் புகார் கொடுத்தார். அதன்பேரில் முதல்நிலை காவலர் மணிகண்டன் (39), எஸ்ஐ ராஜசேகர் (56) ஆகியோர் நேற்று கார்த்திக் வீட்டிற்கு விசாரிக்க சென்றனர்.