டெல்லி: 2002-ல் குஜராத் கலவரத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 2 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 வாரத்தில் குஜராத் அரசு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு அரசு வேலை வழங்கவும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிடப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி கடந்த 2002ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 பேருக்கும், 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, 2 போலீசார், 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.