பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ஸ்ரீ பவானியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலில் இருந்து சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது, ஒருவர் கோயில் உண்டியலை உடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொதுமக்களை பார்த்த அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர்.