சாம்பியன்: பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி சாதனை
காத்மாண்டு: ‘சாப்’ கோப்பைக்கான தெற்காசிய யு-18 கால்பந்து போட்டித் தொடரில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. காத்மாண்டுவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் யு-18 அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே இந்திய வீரர் விக்ரம் பிரதாப் சிங் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். வங்கதேச வீரர் யாசின் அராபத் 40வது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.