சேலம்: புரட்டாசி எதிரொலியால் இறைச்சிக்கடையில் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாளுக்கு படையலிடுவது வழக்கம். நடப்பாண்டு புரட்டாசி கடந்த 18ம் தேதி தொடங்கியது. அன்று முதல் இறைச்சிக்கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி இறைச்சிக்கடையில் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் இறைச்சி விற்பனை சரியும்.