சென்னை : ‘‘இந்தியாவில் பலியல் கல்வி அனைவருக்கும் அவசியம்” என்று பிரபல பாலியல் சிகிச்சை நிபுணர்கள் கே.எஸ்.ஜெயராணி காமராஜ், டி.காமராஜ் ஆகியோர் உலக பாலியல் ஆரோக்கிய தினத்தையொட்டி வடபழனி ஆகாஷ் மருத்துவனையில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதலாவதாக குழந்தையின்மை சிகிச்சைகென்றே அனைத்து நவீன உள்கட்டமைப்புகளுடனும், மருத்துவ உபகரணங்களுடனும் தொடங்கப்பட்டது வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவனை. இதன் இயக்குநர்கள் பேராசிரியர் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் குழந்தையின்மை சிகிச்சையில் உலகளவில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.கர்பப்பை இல்லாத ஓமன் நாட்டை சேர்ந்த சாமியா அலி (65) என்ற பெண்ணுக்கு நவீன சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை உருவாக்கி குழந்தை பேறு கிடைக்க செய்து உலக சாதனை படைத்துள்ளனர். இதன் இயக்குனர் ஜெயராணி காமராஜ் உலக பாலியல் மருத்துவர்கள் சங்க மீடியா குழு தலைவராகவும் டாக்டர் டி.காமராஜ் உலக பாலியல் உரிமைகள் குழு உறுப்பினராகவும் உள்ளார். உலக பாலியல் ஆரோக்கிய தினத்தையொட்டி சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செக்சுவல் மெடிசின் அமைப்பும், ஆகாஷ் மருத்துவனையும், காமராஜ் மருத்துவனையும் இணைந்து அனைவருக்கும் பாலியல் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கை கடந்த 7 நாட்களாக நடத்தினர். கருத்தரங்கை தொடங்கி வைத்து காமராஜ் ஜெயராணி காமராஜ் பேசியதாவது: