சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அரசியல் வேண்டாம் என நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். சில வருடங்களுக்கு முன் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால் அரசியல் சரிப்படவில்லை எனக் கூறி ஒதுங்கினார். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.இது குறித்து சிரஞ்சீவி கூறியது: சினிமாவில் நம்பர் ஒன் இடத்திலிருந்தேன். அதைவிட்டு ஆர்வத்தோடு அரசியலுக்கு வந்தேன். என் சொந்த தொகுதியில் என்னை தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவு செய்து தோற்கடித்தார்கள். என் தம்பி பவன் கல்யாணுக்கும் அதேதான் நடந்தது.