சென்னை: வாகன உற்பத்தி துறை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை சீரடைந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்த அதே நாளில் அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி வாகன விற்பனை சரிவு காரணமாக சென்னை மற்றும் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளில் உற்பத்தி வெகுவாக குறைக்கப்படுகிறது. இதனால் சென்னை எண்ணுரில் உள்ள தொழிற்சாலைக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.