சென்னை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் திறக்கப்படாமல் இருக்கும் 3 ரசிகர் மாடங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் கூறியுள்ளார்.டிஎன்சிஏ 87வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள அனைவரும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். டிஎன்சிஏ தலைவர் ரூபா குருநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். டிஎன்சிஏ வரலாற்று சிறப்புமிக்க அமைப்பு. பல்வேறு தலைவர்கள் இதை மிகத் திறம்பட வழிநடத்தி உள்ளார்கள்.