துபாயில் அக்டோபர் 4-ம் தேதி முத்தமிழ் சங்கம் ஈவெண்ட் சார்பில் தமிழ் கலைநிகழ்ச்சி: இசைமைப்பாளர் தேவா உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பு

துபாய்: துபாயில் வரும் அக்டோபர் 4-ம் தேதி அன்று முத்தமிழ் சங்கம் ஈவெண்ட் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அல்நாசர் லிசர்லேண்ட் ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணியளவில் தொடங்கி இரவு 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த கலைநிகழ்ச்சியில் இசைமைப்பாளர் தேவா உள்ளிட்ட ஏராளமான திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுக்கள் பர் துபாயில் உள்ள பெருமாள் பூக்கடை மற்றும் அல் பதூல் டாகுமெண்ட் கிளியரிங்க் அலுவலகத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகள் ஆன்லைனிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: