துபாய்: பத்திரிக்கையாளர் ஜமோல் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், சவூதி அரசு குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவருமான ஜமால் கசோகி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்து வரும் அக்டோபருடன் ஓராண்டு ஆகும் நிலையில் அமெரிக்க பொது ஒலிபரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோகி மரணத்துக்கு தானே பொறுப்பு எனக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.