கொடைக்கானல்: கொடைக்கானலில் தாய் இறந்த சோகத்தில் மகன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆம்புலன்ஸ் பழுதால் உரிய நேரத்தில் சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் பரிதாபமாக இறந்தார். கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூண்டியை சேர்ந்தவர் தவநீதி (30). விவசாயி. இவரது தாய் லோகம்மாள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதன்பின்பு தவநீதி மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தாய் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தவநீதி தனது தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.