ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்திற்குள், மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு துவங்கி பலத்த மழை பெய்தது. 2 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. லெட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.