கூடலூர்: கூடலூர் அருகே மழை பெய்த போது சிவப்பு நிறத்தில் மழைநீர் இருந்துள்ளது. இது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி கிராமம் தமிழக எல்லைப் பகுதியில் அமைத்துள்ளது. இதனை ஒட்டிய கேரள மாநில எல்லைப்பகுதியான வழிக்கடவு பஞ்சாயத்துக்குட்பட்ட முண்டா மற்றும் கூவத்தி பொழில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் 2 கி.மீ., சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் சிகப்பு நிறத்தில் பெய்துள்ளது. சிவப்பு நிறத்தில் பெய்த மழை நீரை பார்த்து ஆச்சரியம் அடைந்த அப்பகுதி மக்கள் அவற்றை பாத்திரங்களிலும் பாட்டில்களில் நிரப்பி வைத்து உள்ளனர்.