காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் இன்று உகாண்டா பயணம்

சென்னை: காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக பங்கேற்க சபாநாயகர் தனபால் இன்று அதிகாலை உகாண்டா புறப்பட்டு செல்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 25ம் தேதி முதல் 27 வரை உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவிருக்கும் 64வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக தமிழக சபாநாயகர் தனபால் கலந்து கொள்கிறார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் தோகா சென்று அங்கிருந்து கம்பாலா நகருக்கு செல்கிறார். மாநாட்டில் பங்கேற்றபின் அக்டோபர் 11ம் தேதி 2.10 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: