புதுடெல்லி: `இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பரிசீலிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரைத்தார்.