மீனவர்களுக்கு ஹிகா புயல் எச்சரிக்கை

அகமதாபாத்: அரபிக் கடலில் ‘ஹிகா’ என்ற புயல் உருவாகியுள்ளதால், குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாறியதால், ‘ஹிகா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குஜராத்திலிருந்து 490 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தை கடக்க வாய்ப்பில்லை என்றாலும், குஜராத் கடல்  பகுதியில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: