கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி பொங்கல் விழா நேற்று நடந்தது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு மூல ஆதாரமான காவிரிக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை காவிரி படித்துறையில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று இரவு ராஜராஜேந்திரன் பேட்டை படித்துறையில் நடந்தது. சிறப்பு அர்ச்சனையை பேராசிரியர் சுசீத்ரா பார்த்தசாரதி தொடங்கி வைத்து பேசினார். ரமணி கோபாலன் குழுவினர் இறைவணக்கம் பாடினார். விருத்தாம்பாள் சந்திரமோகன் வரவேற்றார். விமலா தயாளன், தனலெட்சுமி முருகதாஸ், அருள்மொழி சாமிநாதன், லதா முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.