நூர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் ஒரு ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரை இறுதியில், சுவிட்சர்லாந்தின் ஸ்டீபன் ரெய்ச்முத்துடன் நேற்று மோதிய தீபக் பூனியா (20 வயது) 8-2 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலமாக தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள அவர், இந்தியாவுக்காக ஒரு ஒலிம்பிக் ‘கோட்டா’ இடத்தையும் உறுதி செய்து அசத்தினார்.