பிரதமராக 2வது முறை பதவியேற்றப்பின் முதல் முறையாக 30-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி: விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு

சென்னை: வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி,  ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக  நரேந்திர மோடி பதவியேற்றார்.  அவர் பதவியேற்ற பின்னர் தமிழகம் வரவில்லை. இந்த நிலையில் 2வது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி வரும் 30ம் தேதி சென்னை வருகிறார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை வர உள்ள பிரதமருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கவும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 24-ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: