வாஷிங்டன்: சீனா, அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் போலி ெசய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகள் மூடப்பட்டன. டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தற்போது ஏராளமான பொய் செய்திகளும், புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாக ெகாண்டு இயங்கும் டிவிட்டர் நிறுவனம், போலி செய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு சார்பான பிரச்சார செய்திகளை சில நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகள் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர்.