புழல்: விநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் மாநகர போக்குவரத்து பஸ் நிலையம் உள்ளது. இந்த வளாகத்தில் புழல் புறக்காவல் நிலையம் மற்றும் அம்மா உணவகம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விநாயகபுரம், கல்பாளையம், புத்தகரம், பத்மாவதி நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர், பரிமளம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்லும்போது, தங்களது சைக்கிள்களை இந்த பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.