கரூர்: கரூரில் நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை தூக்கிச்சென்று அவரை ஆசுவாசப்படுத்திய மாவட்ட ஆட்சியரின் மனித நேயத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், குளித்தலை டோல்கேட் வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது 70 வயது முதியவர் ஒருவர் சாலையின் நடுவே மயங்கி விழுந்ததை கண்ட ஆட்சியர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி போக்கவரத்து போலீசாரின் உதவியோடு அருகிலுள்ள டீக்கடைக்கு முதியவரை தூக்கி சென்றுள்ளார். அங்கு அவரை அமர வைத்து, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.