அணைக்கட்டு: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமம் பச்சையம்மன் கோயில் 15ம் ஆண்டு திருவிழா கும்பாபிஷேகத்துடன் கடந்த 13ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கபட்ட தேரில் மேளதாளம், வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோயில் முன் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக விரதம் இருந்த பக்தர்கள் தங்களது உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக்கொண்டும், கொக்கலிக் கட்டை கட்டிக் கொண்டும், அம்மன், காளி உள்ளிட்ட வேடங்களில் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.