கோவை: கோவையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை தடுத்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. கோவை சுகுணாபுரம் அருகே நாகராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மகன் முரளி (26). கூலி தொழிலாளியான இவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனேஅந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி கண்ணன் (35) மற்றும் அவரது தாய் வேலாயி (60) ஆகியோர் அங்கே ெசன்று முரளியை தடுக்க முயன்றனர்.