விடுதி உரிமையாளர் புகார் அதிமுக முன்னாள் எம்.பி. கணவர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா சாமுவேல் (45). இவர் கோபியில் லாட்ஜ் நடத்தி வருகிறார். நிர்மலாவின் செல்போனில், கடந்த 11ம் தேதி அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் வாசு தொடர்பு கொண்டு, உல்லாசமாக இருக்க பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து நிர்மலா, கோபி போலீசில் புகார் அளிக்க  சென்றார். அங்கு புகாரை வாங்க மறுத்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளபோவதாக எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, வாசுவின் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: