திருப்பூர்: திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரின் பிரதான பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள பாதாள சாக்கடையில் திருப்பூரின் மைய பகுதியில் உள்ள அனைத்து சாக்கடைகளும் செல்கிறது. அடிக்கடி இந்த பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது ரோட்டில் பாய்ந்தோடும். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் கடைகள் நடத்துபவர்களுக்கும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.