திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மழைநீர் வடிகால் வசதிஏற்படுத்தப்படாததால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் சிறிது மழை பெய்தாலே மழைநீர் தேங்கிநின்றுவிடுகிறது.இதனுடன் நகரிலுள்ள கழிவு நீரும் சேர்ந்து கொள்கிறது.இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அந்தமழை நீரும் கழிவு நீரும் சேர்ந்த தண்ணீர் பொதுமக்கள் மீது தினந்தோறும் படுவது வாடிக்கையாக உள்ளது.மழைநீரும் சாக்கடை நீரும் சேர்ந்து கொண்டு சாலைகளிலுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்திகூடமாகதிகழ்கிறது. சாலைகளில் மழை நீர் தேங்குவது குறித்து பலமுறை செய்திகள் வெளியிட்டும், முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் நிர்வாகம் எந்தவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.