திண்டுக்கல் : ஆணி படுக்கையில் தொடர்ந்து 24 மணிநேரம் பத்மாசனம் செய்து திண்டுக்கல் மாணவர் மீண்டும் உலக சாதனை படைத்தார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக்குமார். ஜிடிஎன் கல்லூரியில் பிஎஸ்சி உடற்கல்வி 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வரும் இவர் உலக சாதனை படைக்க எண்ணினார். இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் 1,500 ஆணிகள் கொண்ட படுக்கையில் தீபக்குமார் நேற்று முன்தினம் காலை 10.30 மணி முதல் நேற்று காலை 10.30 மணி வரை தொடர்ந்து 24 மணிநேரம் அமர்ந்து பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்தார்.