டெல்லி எய்ம்சில் சிகிச்சை பெறும் உன்னாவ் பெண்ணின் வாக்குமூலம் முடிந்தது

புதுடெல்லி: உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம், ரகசிய வாக்குமூலம் பெறுவது முடிந்தது. உத்தபிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியை ேசர்ந்த இளம்பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 28ம் தேதி அந்த இளம்பெண் காரில் சென்றபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பெண்ணின் 2 அத்தைகள் பலியாகினர். இளம்பெண்ணும், அவருடைய வக்கீலும்  படுகாயம் அடைந்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அந்த பெண் டெல்லி எய்ம்சில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிப்பதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே தற்காலிகமாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நேற்று, இளம்பெண்ணிடம் நீதிபதி தர்மேஷ் சர்மா ரகசிய வாக்குமூலம் பெற்றார். இத்துடன், அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெறுவது முடிந்தது.

Related Stories: