வாஷிங்டன்: சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரால் இரண்டு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டுக் வரிகளை விதித்து வருகின்றன. இதனால் உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரியானது 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அக்டோபர் 1 ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.