சிவகங்கை: சிவகங்கை அருகே கோவானூரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது: சிவகங்கை அருகே கோவானூரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கோவானூர் பெரிய கண்மாய் என அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மாயில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது. இத்தூண்களின் உள்பகுதிகளில் கல்வெட்டு எழுத்து உள்ளது.